கல்பாக்கம் ஈசிஆர் சாலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டி படுகொலை!
கல்பாக்கம்: கல்பாக்கம் அருகே ஈசிஆர் சாலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டுள்ளனர்.
கல்பாக்கம் அருகே காத்தான்கடையில் பெட்ரோல் பங்க் வைத்திருந்தவர் மோகன்ராஜ் (50). இவரது வீடு கூவத்தூரை அடுத்த பேட்டையில் உள்ளது. இவர் தினமும் இரவு 11 மணிக்கு வேலைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம்.

அது போல் நேற்று இரவு 11 மணிக்கு பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரை காரில் மர்மநபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இதை அறியாமல் மோகன்ராஜ், எப்போதும் போல் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இடத்தில் திடீரென மோகன்ராஜை மர்மநபர்கள் வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ், தப்பியோட முயன்ற போது மறைத்து வைத்திருந்த கத்தியால், மோகன்ராஜை, மர்மநபர்கள் வெட்டிக் கொன்றுவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மகும்பலை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications