பெட்ரோல், டீசல் விலை கேட்டாலே வயிற்றில் புளி கரைக்கிறது.. மக்கள் வேதனை
Recommended Video
சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் நேற்று முன் தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ. 87.24-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.79.64-க்கு விற்பனையானது.
நேற்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று அவை உயர்ந்துள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 15 காசுகள் அதிகரித்து, ரூ.87. 33 -க்கும் டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ.79. 79 -க்கும் விற்பனையாகிறது.
[குட்டி தேவதை ஜியாஜியா.. தந்தைக்கு தாயாகிப்போன 6 வயது மகள்!]
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில் கேஸ் சிலிண்டரின் விலையும் கடந்த 1-ஆம் தேதி முதல் உயர்ந்துள்ளது. பெட்ரோல் என்ற பெயரை கேட்டாலே வயிற்றில் புளி கரைப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.