பெட்ரோல், டீசல் விலை உயர்வில் காங்கிரசை பின்பற்றும் பாஜக: ஜெ., வைகோ கண்டனம்
சென்னை: பெட்ரோல், டீசல் உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்த விலை நிர்ணய அதிகாரத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா கண்டனம்
பெட்ரோல் டீசல் விலை நிர்ணய அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான கொள்கையை பாஜக அரசும் பின்பற்றுகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏழைகளை பாதிக்கும் - வைகோ
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார். ''இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக மே மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

பாஜக அரசின் சாதனை
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பதாக பா.ஜ.க. அரசு நாடகம் ஆடியது. ஆனால், கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலையை 15 ரூபாய் 05 காசும், டீசல் விலையை 11 ரூபாய் 15 காசும் உயர்த்தி இருப்பதுதான் பா.ஜ.க. அரசின் சாதனை ஆகும்.

திரும்ப பெறுக
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் உயர்த்தி மக்கள் மீது அதிக சுமையை ஏற்றி உள்ளது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிப்பதுடன், சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களும் பாதிப்புக்கு உள்ளாவர்கள். எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று வைகோ கூறி உள்ளார்.

இ.கம்யூனிஸ்ட் முத்தரசன்
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் 42 சதவிகிதம் விலைவாசி உயர்ந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது மேலும் விலைவாசி உயர வழிவகுக்கும்.

இ.கம்யூனிஸ்ட் கண்டனம்
இந்த விலை உயர்வு தனியார் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபக் கொள்ளைக்கு வழி வகுப்பதோடு அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிகோலும். எனவே,இந்த விலை உயர்வை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications