தமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலை மிக கடும் உயர்வு!
தமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ1.76 அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.76 என நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.76ஆக உயர்ந்துள்ளது. இவ்விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ74.47 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ62.63 ஆகவும் அதிகரித்துள்ளது. பொதுவாக எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.
அதேநேரத்தில் மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வது குறிப்பிடத்தக்கது.