தொடர்ந்து இமாலய விலை விற்கும் பெட்ரோல், டீசல்.. விரைவில் செஞ்சுரி அடிக்க வாய்ப்பு!
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து அதிக விலையில் விற்கிறது.
Recommended Video
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து அதிக விலையில் விற்கிறது. விரைவில் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 100ஐ தொடும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்த விலையில் இன்னும் அதிக உயர்வு ஏற்படும் என்று பொருளாதர நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று விற்கப்பட்ட அதே விலையில் விற்கிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41 காசுகளாகும். டீசல் விலை 42 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.98 காசுகளாகும்.
தினமும் பைசா கணக்கில் பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது.
மும்பையில் பெட்ரோல் விலை 87 ரூபாய்க்கு விற்கிறது. இந்தியாவிலேயே அங்குதான் பெட்ரோல் விலை அதிக அளவில் விற்கிறது.