பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு.. இன்று காலை முதல் அமல்
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றியமைத்து வந்தன.
இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வந்த நிலையில், டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பங்க் உரிமையாளர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 20 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 67.42க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ57.03 க்கு விற்பனை செய்யப்படும்.