Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போயஸ் இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? விசாரணை கேட்கிறார் பி.ஹெச்.பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் சபாநாயகரும், அதிமுக முன்னணி தலைவருமான பி.ஹெச்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, செப்டம்பர் 22ம் தேதி இரவு ஜெயலலிதாவுடன் வீட்டில் யார், யார் இருந்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். அப்பல்லோ வேண்டுமானால் தனிப்பட்ட உரிமை என்று கூறி ஜெயலலிதா சிகிச்சை குறித்து தகவல் வெளியிடாமல் இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா வீட்டில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கலாமே.

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனைக்கு உட்படுத்துவேன் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி கூறினார். ஆனால் அது கூட தேவையில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே போதும் சசிகலாதான் குற்றவாளி என்று தீர்மானிக்க. இந்திராகாந்திக்கு என்ன பிரேதபரிசோதனையா செய்தார்கள்? இல்லையே.

PH Pandian demands probe against Sep 22 at poes garden

ஆதாரம் இல்லாவிட்டாலும் சூழ்நிலை போதும் என்பதே சட்டம். ஜெயலலிதா மர்மமாக உயிரிழந்த20 நாட்களிலேயே சசிகலா அதிமுக பொ.செயலாளராக பதவியேற்றுள்ளதை வைத்து பார்த்தால் இந்த சூழ்நிலையே முடிவை தீர்மானிக்க போதுமானது. எனவே, செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+