சென்னை போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் திடீர் மரணம்
சென்னை போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்துள்ளார்.
Recommended Video

சென்னை: போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்துள்ளார்.
ஊதிய உயர்வு , புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

அவர்களை போலீசார் கைது செய்து பள்ளிக்கூடம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை பாபநாசம் அரசு பள்ளி ஆசிரியர் தியாகராஜன் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் பள்ளியில் தங்க வைத்திருந்தது. தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆசிரியர் தியாகராஜனின் உயிர் பிரிந்தது.

உயிரிழந்த ஆசிரியர் தியாகராஜன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். தஞ்சை பாபநாசம் அரசு பள்ளியில் சிறப்பு ஆசிரியராக தியாகராஜன் பணிபுரிந்து வந்தார்.












Click it and Unblock the Notifications