தனியார் பாலில் ரசாயனக் கலப்பா?.. சிபிஐ விசாரணை கோரி ஹைகோர்ட்டில் மனு!
தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை ஹைகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தொடரப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் பாலில் 100 சதவீதம் ரசாயன கலப்படம் செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே கடந்த வாரம் போட்டு உடைத்தார். இதனை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க மத்திய அரசின் சோதனைக் கூடங்களுக்கு பால் பாக்கெட் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆய்வின் முடிவு படி தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தனியார் பாலில் ரசாயனம் கலப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பாலில் கலப்படம் என்று அரசே கூறுவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கலப்படம் செய்வதாகக் கூறும் அரசு, நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.
பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்றும் மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வருகிறது. அப்போது அரசு தரப்பும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை ஒப்படைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications