சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம்
சேலம்: சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனகூறி மாற்று பாதை அமைக்கக் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பியூஸ் மனுஷ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பியூஸ் மனுஷிக்கு ஜாமின் கேட்டு அவரது மனைவி மோனிகா சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஷேசசாயி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பியூஸ் மனுஷ் வழக்கறிஞர் ப.பா.மோகன், அரசு வழக்கறிஞர் தனசேகரின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தொடங்கியது.
அப்போது, பியூஸ் மனுஷ் போன்ற சமூக ஆர்வலர்களின் ஆதரவு நாட்டிற்கு தேவை. தனிமனிதனாக இது போன்ற பிரச்சனைகளில் போராடினால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. சமூக அமைப்புகள், முற்றுகை போராட்டம், சாலை மறியல் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடும் சமயத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதம், பேரணி போன்ற அறவழிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
முதலில் பிரச்சனைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன்பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம். தனிமனிதனாக ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படும் நிலை ஏற்படும் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து, பியூஸ் மனுஷிக்கு ஜாமின் வழங்கக் கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் ரயில்வே மேம்பால பணிகள் பாதிக்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பியூஸ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும்வரை தினமும் 2 முறை நீதிமன்றத்தில் காலை, மாலையில் கையெழுத்திட வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து நாளை சிறையில் இருந்து பியூஷ் வெளிவருகிறார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications