”அலைகடலென வாரீர்.. ஆதரவு தாரீர்”-பெ.ம.க வின் முதல் மாநாட்டுக்கு அழைப்பு
சென்னை:பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் முதல் மாநாடுக்கு மக்களை திரண்டு வருமாறுஅழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பெருந்தலைவர் மக்கள் கட்சியில்தான் சரத்குமார் முதன் முதலில் சேர்ந்தார். அதாவது தமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து பார்த்து விட்டு வெளியே வந்த பிறகு. ஆனால் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே அதிலிருந்து விலகித்தான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அவர் ஆரம்பித்தார்.
அப்படிப்படட் பெருந்தலைவர் மக்கள் கட்சி தனது முதல் மாநில மாநாட்டை நடத்தவுள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் தனபாலன் தனது அறிக்கையில்,"பெருந்தலைவர் மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிற இந்த நேரத்தில் ஊழல்வாதிகளையும், மதவாத சக்திகளையும் காமராஜர் வாழ்ந்த மண்ணில் கால் ஊன்ற விடமாட்டோம் என்ற உறுதியுடன் பெருந்தலைவரின் பெரும் படை தயாராக இருக்க வேண்டும்.
பாரத நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டு ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அந்த மாற்றம் மீண்டும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக்கும் ஆதிக்க சக்திகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு செயல்படும். பெருந்தலைவரின் வழி நடக்கும் நம் கட்சியின் மாநாட்டிற்கு அலை கடலென திரண்டு வாரீர்.
பெருந்தலைவர் யாருக்கும், எவருக்கும் எந்த இடையூறும் செய்யாதவர் என்பதை மனதில் கொண்டு, அவர் வழியில் வரவேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications