”விதைக்கப்பட்ட மாமனிதனுக்காக வீட்டுக்கொரு மரம் நடுவோம்” - பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கை!
புதுகை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகளும், அஞ்சலிக் கூட்டங்களும் நடைபெற்ற நிலையில் புதுக்கோட்டையில் அவரது உருவம் தத்ரூபமாக வரையப்பட்டு அவருக்கு ஓவியாஞ்சலி நடைபெற்றது. இந்நிலையில் வீட்டுக்கொரு மரம் நடுதலே அவருக்கான உண்மையான அஞ்சலி என்ற செய்தியும் அனைவரிடமும் பரவி வருகின்றது.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலாம், அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவை அனுசரிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம், புளிச்சங்காடு கைகாட்டியில் ஓவியர் சேரனால் வரையப்பட்ட அப்துல் கலாம் ஓவியத்திற்கு பொதுமக்களும் அந்த வழியாக சென்ற பயணிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் கலாம் அவர்களின் இன்றைய நல்லடக்க தினத்தினை நினைவு கூறும் வகையில், விதைக்கப்பட்டார் கலாம் என்பதற்கேற்ப ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செடியை நட்டு அதனைப் பராமரித்து, அவருடைய ஒவ்வொரு நினைவு தினத்திலும் அச்செடியின் வளர்ச்சிக்கு அடிகோலினால் அதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் இளைஞர்களுக்கிடையே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்











Click it and Unblock the Notifications