Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுதியில் தவிக்கும் கணவர்கள்... மீட்டுத் தரக் கோரி கலெக்டரை மனுவுடன் சந்தித்த 2 பெண்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சவுதி அரேபியாவில் உயிருக்கு உத்தரவாதம் இன்றி கொத்தடிமைகளாக தவிக்கும் தங்களது கணவர்களை மீட்டுத்தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு பெண்கள் மனு அளித்துள்ளனர்.

வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்ற தமிழகப் பெண் ஒருவர், அங்கு முதலாளியால் கை வெட்டப்பட்டு ரியாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Plea to bring back spouses from Saudi Arabia

இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, வெளிநாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழும் தங்களது கணவர்களை மீட்டுத் தரக்கோரி இரண்டு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கல்லம்பட்டியை சேர்ந்தவர்கள் சிவக்குமார், ஜெயராம். சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வரும் இவர்களது மனைவிகளான, சிவக்குமாரின் மனைவி போதும்பொண்ணு, ஜெயராமனின் மனைவி கார்த்திகா ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ‘எங்கள் கணவர்கள் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கடந்த மார்ச் மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்றனர். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியதால் அங்கு போனார்கள். ஆனால் அங்கே சம்பளம், உணவு இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக டெலிபோன் மூலம் எங்களிடம் தெரிவித்தார்கள். மேலும் அவர்களது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை எனவும் அழுதபடி கூறினார்கள். எனவே இருவரையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+