சவுதியில் தவிக்கும் கணவர்கள்... மீட்டுத் தரக் கோரி கலெக்டரை மனுவுடன் சந்தித்த 2 பெண்கள்!
மதுரை: சவுதி அரேபியாவில் உயிருக்கு உத்தரவாதம் இன்றி கொத்தடிமைகளாக தவிக்கும் தங்களது கணவர்களை மீட்டுத்தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு பெண்கள் மனு அளித்துள்ளனர்.
வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்ற தமிழகப் பெண் ஒருவர், அங்கு முதலாளியால் கை வெட்டப்பட்டு ரியாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, வெளிநாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழும் தங்களது கணவர்களை மீட்டுத் தரக்கோரி இரண்டு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கல்லம்பட்டியை சேர்ந்தவர்கள் சிவக்குமார், ஜெயராம். சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வரும் இவர்களது மனைவிகளான, சிவக்குமாரின் மனைவி போதும்பொண்ணு, ஜெயராமனின் மனைவி கார்த்திகா ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், ‘எங்கள் கணவர்கள் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கடந்த மார்ச் மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்றனர். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியதால் அங்கு போனார்கள். ஆனால் அங்கே சம்பளம், உணவு இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக டெலிபோன் மூலம் எங்களிடம் தெரிவித்தார்கள். மேலும் அவர்களது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை எனவும் அழுதபடி கூறினார்கள். எனவே இருவரையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications