Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை... 38 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி: செந்தில் பாலாஜி மீது புதிய புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 38 பேரிடம் ரூ.60 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, 2 மேலாண்மை இயக்குநர்கள் மீது வழக்கு பதியக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011 -2016 ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி; அ.தி.மு.கவின் கரூர் மாவட்ட செயலராகவும் இருந்து வந்தார். ஆட்சி முடியும் தருணத்தில் அவரது அமைச்சர் பதவியும் கட்சிப்பதவியும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது பலரும் புகார் அளித்தனர்.

Senthil Balaji

செந்தில் பாலாஜி, அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வழங்குவதாக, பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, கடந்த மார்ச் மாதம் 48 பேர் போலீசில் புகார் அளித்தனர். ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு, 3 லட்சம் ரூபாய்; மெக்கானிக் பணிக்கு, 6 லட்சம் ரூபாய் என 3 கோடி ரூபாய்வரை வசூலித்ததாகவும் பணி ஆணை வழங்கவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பையா, உயர் நீதிமன்ற கிளையில் சில தினங்களுக்கு முன்னர் மனு தாக்கல் செய்துள்ளார்.

காரைக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிகிறேன். 2014ல் அப்போதைய காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பாபு, அரசு போக்குவரத்துக் கழகத்தில் இளநிலை உதவியாளர், அலுவ லக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு புதி தாக ஆட்கள் தேர்வு செய்யப் படுவதாகவும், அப்போதைய போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பணம் வழங்கினால் வேலை கிடைக்கும் என என்னிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசு வேலை தேடிக்கொண்டு இருக்கும் எனது நண்பர்களிடம் தெரிவித்ததுடன், அவர்களை மேலாண்மை இயக்குநர் பாபுவிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவர்களிடம் என்னுடைய வங்கிக் கணக்கை வழங்கிய பாபு, அந்த கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த கூறியுள்ளார்.

அவரது பேச்சை நம்பி எனது வங்கிக் கணக்கில் 38 பேர் அவ்வப்போது பணம் செலுத்தினர். அந்தப் பணத்தை எடுத்து பாபுவிடம் வழங்கினேன். பாபு ஓய்வு பெறும் வரை அவரிடம் ரூ.60 லட்சம் வழங்கினேன். அவர் ஓய்வுக்கு பிறகு மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்ற ரங்கராஜ் என்னிடம், அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் பாபு சார்பில் பணி நியமனம் பெற்றுத் தருவது எனது பொறுப்பு என்றார். ஆனால் அவர் பணி நியமன உத்தரவு வழங்கவில்லை.

தமிழகத்தில் 2011 முதல் 2016 வரை போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி உடன் பாபு, ரங்கராஜ் ஆகியோரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரி சிவகங்கை போலீஸாரிடம் 25.7.2016ல் புகார் அளித்தேன். இதுவரை வழக்கு பதிவு செய்ய வில்லை. எனது புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+