அண்ணா பல்கலை. மதிப்பெண் முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
மதுரை: அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்ற மதிப்பெண் மறுமதிப்பீடு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனுவை மதுரை ஹைகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த திங்கட்கிழமை பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில் சென்னையில் உள்ள அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு மற்றும் மறு மதிப்பீடு செய்வதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழகத்திலுள்ள 593 கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில், பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களின் எதிர்கால நலன் மீதான அக்கறை அடிப்படையில் இந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், என்று தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.
இந்த மனு இன்று நீதிபதி சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு எப்போது பதிவு செய்யப்பட்டது? தற்போது என்ன விசாரணை நடைபெறுகிறது? என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.
"ஜூலை 31ம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அரசு வழக்கறிஞர் பதில் தெரிவித்தார்.
மாணவர்கள் நலன் கருதி அரசு அக்கறை எடுத்து செயல்பட்டு வருகிறது என்று அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். "இந்த வழக்கு விசாரணை ஆரம்பித்து இன்னும் பத்து தினங்கள் கூட ஆகவில்லை, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது என்பது உகந்தது அல்ல, எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications