அண்ணா பல்கலை. மதிப்பெண் முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
மதுரை: அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்ற மதிப்பெண் மறுமதிப்பீடு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனுவை மதுரை ஹைகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த திங்கட்கிழமை பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில் சென்னையில் உள்ள அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு மற்றும் மறு மதிப்பீடு செய்வதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழகத்திலுள்ள 593 கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில், பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களின் எதிர்கால நலன் மீதான அக்கறை அடிப்படையில் இந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், என்று தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.
இந்த மனு இன்று நீதிபதி சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு எப்போது பதிவு செய்யப்பட்டது? தற்போது என்ன விசாரணை நடைபெறுகிறது? என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.
"ஜூலை 31ம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அரசு வழக்கறிஞர் பதில் தெரிவித்தார்.
மாணவர்கள் நலன் கருதி அரசு அக்கறை எடுத்து செயல்பட்டு வருகிறது என்று அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். "இந்த வழக்கு விசாரணை ஆரம்பித்து இன்னும் பத்து தினங்கள் கூட ஆகவில்லை, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது என்பது உகந்தது அல்ல, எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications