ஒரு பிஞ்சு குழந்தையின் உயிர் காக்க.. 67 நாட்களில் கல்லீரல் நோயால் அவதிப்படும் குழந்தைக்கு உதவுங்கள்
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் நேர்மையான உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்ற எஸ்.என்.திலீபன் என்பவரின் குழந்தை பிறந்த 67 நாட்களில் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மக்களாலேயே நேர்மையான அதிகாரி என்று பாரட்டப்படும் இவர் இதுவரையில் சம்பளத்திற்கு மேல் எதனையும் பெற்றதில்லை. அதனாலேயே தன்னுடைய குழந்தையின் மருத்துவ செலவிற்கு கூட பணம் திரட்ட முடியாத நிலையில் தத்தளித்து வருகின்றார் திலீபன்.

ஏற்கனவே அவரது முதல் குழந்தைக்கும் இதே நோயால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் தற்போது புதிதாக பிறந்துள்ள இரண்டாவது குழந்தைக்கும் அதே நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அக்குழந்தை தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமென்றால் 22 லட்ச ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவ மனை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவருடைய எண்ணை நாங்கள் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்...
பிறந்து 67 நாட்களில் நோயின் பிடியில் தவிக்கும் அக்குழந்தையின் உயிர் காக்க உதவ நினைப்பர்கள் தொடர்பு கொள்க - 9498195244.












Click it and Unblock the Notifications