மே 17-ல் பிளஸ் 2 ரிசல்ட்; மே 25-ல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது!!
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் மே 17-ந் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகளும் மே 25-ந் தேதியன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1-ந் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 13-ந் தேதியும் முடிவடைந்தன.
வழக்கமாக மே முதல் வாரத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும். ஆனால் நடப்பாண்டில் தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ந் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள்ளும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25-ந் தேதி காலை 9.31 முதல் 10 மணிக்குள்ளும் வெளியாகும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in; www.dge1.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.