For Daily Alerts
Just In
கரூர் அருகே காதலிக்க கட்டாயப்படுத்தியதால் பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி
கரூர் : காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதால் கரூர் அருகே தரகம்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒருதலைக் காதலால் கொலைகள் அதிகரித்து வருகின்றன. சென்னை சுவாதி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா என தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் காதலிக்க தம்மை கட்டாயப்படுத்தி அடித்ததால் கரூர் தரகம்பட்டியில் பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியை தாக்கி தற்கொலைக்குத் தூண்டிய தரகம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
English summary
A Plus 2 girl student attempts suicide in Karur.
Story first published: Friday, September 2, 2016, 10:45 [IST]