அரூர்: ஆசிரியரின் பாலியல் தொல்லையால் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூரில் பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரூர் அருகே அனுமன்தீர்த்தம் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவியின் வீட்டை பரிசோதனை செய்த போலீசார், தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிவைத்த கடிதத்தைக் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் உடற்கல்வி ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாகவும், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் பள்ளிக்கு சென்று உடற்கல்வி ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் வேலூர் அருகே அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், தம்பிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி தங்கம்மாள் (14) பயிற்சி ஆசிரியரின் பாலியல் தொல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியைகளே தலைமை ஆசிரியருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்துள்ளனர். கொளத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஏ.சாந்தி, கே.சி.கவிதா உள்பட ஏழு ஆசிரியைகள் தலைமை ஆசிரியரின் பாலியல் தொந்தரவு தாங்காமல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications