பிளஸ் டூ ரிசல்ட் வெளியிடுவதிலும் எமகண்டம், நல்ல நேரம் பார்த்த தமிழக கல்வித்துறை
சென்னை: ப்ளஸ் 2 ரிசல்ட் எப்போது வரும் எப்போது வரும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரிசல்ட் வெளியிட்டது கூட நல்ல நேரம் பார்த்து வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக நல்ல நாள், நேரம் பார்த்து செய்வது வழக்கமானதுதான் என்றாலும் பள்ளி மாணவர்களின் ரிசல்ட் அறிவிப்பதில் கூட நல்ல நேரம் பார்ப்பார்களா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

இன்று வளர்பிறை செவ்வாய்கிழமை, சுக்லபட்ச சர்வ ஏகாதசி திதி காலையில் 9 மணி முதல் 10.30 மணிவரை எமகண்டமாகும். 10.30 மணிக்குதான் நல்ல நேரம் தொடங்குகிறது. எனவே சரியாக 10.31 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவித்தது பள்ளி கல்வித்துறை. 10 டூ 11 சந்திர ஹோரையும் நல்ல ஹோரை என்பதால் சரியான நேரம் பார்த்து அறிவித்தனர் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications