தமிழகத்தை தத்தெடுத்தது போன்று நரேந்திர மோடி புதிய திட்டங்களை தருகிறார்- பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தை தத்தெடுத்தது போன்று நரேந்திர மோடி புதிய திட்டங்களை தந்து வருவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் ரூ.100 கோடி செலவில் 15 ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை விரைவில் முடிவடையும் என்று கூறினார்.

 Pon Radhakrishnan

ரயில்வே துறையில் தற்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை-மதுரை இரட்டை ரயில் பாதை பணி இந்த நிதியாண்டிற்குள் முடிவடையும். மேலும் தமிழகத்தில் ரூ.100 கோடி செலவில் 15 ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மதுரை-குமரி,குமரி-திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தை ரூ.3940 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு முன் வந்துள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தை தத்தெடுத்தது போன்று நரேந்திர மோடி புதிய திட்டங்களை தந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் சென்னை-குமரி 4 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு உடனடியாக நிலத்தை தரவேண்டும் என்றும் தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை திட்டத்தில், இணைந்து செயல்பட தமிழக அரசு முன் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+