ரஜினிக்கு நன்றி தெரிவித்த மோடி... 'தோளோடு தோள் சேர்ந்து உழைக்கலாம்!'

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ 500, 1000 நோட்டுகளை ஒழித்த மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, 'தோளோடு தோள் சேர்ந்து உழைக்கலாம்' என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

PM Modi Thanked Rajinikanth

கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அறிவிப்பு வெளிவந்த சிலமணி நேரங்களில் ட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 'நரேந்திர மோடி அவர்களுக்குப் பாராட்டுகள். புதிய இந்தியா பிறந்துள்ளது. ஜெய் ஹிந்த்' என்று அவர் குறிப்பிட்டார்.

அவரது இந்த ட்வீட்டுக்கு இன்று நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

'நன்றி. அனைவரும் தோளோடு தோள் சேர்த்து உழைத்து, வளமான ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவேண்டும்' என்று மோடி பதிலளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+