பிப் 2-ம் தேதி கோவை வருகிறார் மோடி... பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
சென்னை: பிரதமர் நரேந்திரமோடி கோவைக்கு பிப் 2-ந்தேதி வருகிறார். அன்று மாலை கோவையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இத் தகவலை தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மோடியின் இந்த மாநாடு தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று தமிழிசை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், "தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி பேச்சுவார்த்தை மிகச்சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மக்களுக்கு நலன் தரும் கூட்டணியை விரைவில் அமைப்போம்.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி கோவையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிறார். பா.ஜ.க. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறினோம். அவரும் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை கோவையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது தமிழக தேர்தல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையும்," என்றார்.












Click it and Unblock the Notifications