முரசொலி பவள விழா.. பிரதமர் மோடி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முரசொலி பவள விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
முரசொலி பவள விழா வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

விழாவில், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குவார்கள் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைகோ தன்னால் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் முரசொலி பவள விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களும் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications