ஆம் ஆத்மியில் இணைய நிபந்தனைகள் விதித்த கூடங்குளம் உதயகுமார்
சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்காக கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.
டெல்லியில் ஆட்சியை பிடித்த கையோடு நாடு முழுவதும் கட்சியை விரிவுபடுத்தி வருகிறது ஆம் ஆத்மி. இதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் பிரசாந்த் பூஷண் தமிழகத்துக்கு வருகை தந்திருந்தார்.

அப்போது கூடங்குளம் உதயகுமாரை நேரில் சந்தித்து ஆம் ஆத்மி கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். மேலும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவும் உதயகுமாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மியில் இணைய சில நிபந்தனைகளை பிரசாந்த் பூஷணிடம் உதயகுமார் விதித்திருக்கிறார். தமிழகத்தில் ஆம் ஆத்மி என்ற ஹிந்தி பெயரில் கட்சியை நடத்தாமல் சாதாரண மக்கள் கட்சி என்பது போல தமிழ் பெயருடன் கட்சி நடத்துதல், அணு உலை விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்பதை விளக்க வேண்டும், ஈழம், மீனவர் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், இந்திய கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிர்ப்பு ஆகியவைதான் உதயகுமார் முன்வைத்த நிபந்தனைகள்.
மேலும் தற்போதைய ஆம் ஆத்மியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாவுடன் இணைந்து செயல்படுவதில் சிக்கல் இல்லை என்றும் உதயகுமார் உறுதி அளித்திருக்கிறாராம்..
தேசிய கட்சிகளுக்கெல்லாம் நிபந்தனை விதித்த ஆம் ஆத்மிக்கே நிபந்தனையா?












Click it and Unblock the Notifications