காவிரி வாரியத்திற்காக பாமக சார்பில் முழுஅடைப்பு... எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்!
தமிழகத்தில் பாமக சார்பில் நடைபெறும் முழுஅடைப்பால் கர்நாடகாவில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Recommended Video

தர்மபுரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தர்மபுரி எல்லைப் பகுதியில் 4 அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டதால் முன்எச்சரிக்கையாக தமிழகம் வரும் கர்நாடக பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. பாமக விடுத்துள்ள முழு அடைப்பிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி மதுராந்தகத்தில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வந்தவாசியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கலில் கரூர் - சேலம் பயணிகள் ரயிலை மறித்து பாமகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில் 4 அரசுப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீதித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாமக சார்பில் நடைபெறும் முழு அடைப்பினையொட்டி கர்நாடகா மாநிலத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கர்நாடக எல்லையில் இருந்து தமிழக எல்லைக்கு மாறி வந்து பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications