சிவகாசி, குமாரபாளையம் தொகுதி பாமக வேட்பாளர்கள் மாற்றம்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் மேலும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சிவகாசி, குமாரபாளையம் தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2 தொகுதிகளின் வேட்பாளர்கள் கீழ்க்கண்ட விவரப்படி பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் மாற்றப்படுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செல்வராஜூக்கு பதிலாக மூர்த்தி போட்டியிடுவார் என்றும்,
சிவகாசி சட்டசபை தொகுதியில் சிவநாதபாபுவிற்கு பதிலாக திலகபாமா போட்டியிடுவார் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக வேட்பாளர்கள் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளனர். முன்னதாக உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை ஒட்டி அந்த தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டார். விஜயகாந்துக்கு எதிராக பாலு களமிறக்கப்பட்டார்.
நேற்று இரண்டாவது முறையாக மயிலாப்பூர், தளி, பாலக்கோடு, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 தொகுதிகளின் பா.ம.க. வேட்பாளர்கள் மாற்றபட்டனர். இன்று மூன்றாவது முறையாக குமாரபாளையம், சிவகாசி தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக 6 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கடைசியாக அறிவித்த வேட்பாளர் பட்டியலில்தான் சிவகாசி தொகுதி வேட்பாளராக சிவநாதபாபுவை அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் சிவநாதபாபுவை மாற்றிவிட்டு தற்போது சிவகாசி சட்டசபை தொகுதிக்கு திலகபாமாவை வேட்பாளராக அறிவித்துள்ளார் ராமதாஸ்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications