பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு மக்களுக்கு ஏமாற்றம்- ராமதாஸ் கண்டனம்!
சென்னை: மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூபாய் 1.50 உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த வரி உயர்வினால் மக்கள் அனுபவிக்க தொடங்கி இருக்கும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பில் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

உயர்த்தப்பட்டுள்ள கலால் வரி:
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 1.20லிருந்து ரூபாய் 2.70 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூபாய் 1.46 லிருந்து ரூபாய் 2.96 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

நூறு சதவீதத்துக்கும் அதிகமான வரி:
இது பெட்ரோல், டீசல் விற்பனையைப் பொருத்த வரையில் 100 சதவீதத்துக்கும் அதிகமான வரி உயர்வாகும்.

5 ஆண்டுகளாக விலை ஏற்றம்:
2009 ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலான 5 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 31ம்,டீசல் விலை ரூபாய் 30ம் உயர்த்தப்பட்டன.

விலை குறைவு இப்போதுதான்:
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை இப்போது தான் குறையத் தொடங்கியிருக்கிறது. அதன் பயனை மக்கள் இன்னும் முழுமையாக அனுபவிக்கவில்லை.

கண்டிக்கத்தக்க உயர்வு:
அதற்குள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மீண்டும் அதிகரிக்கும் விலை:
கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கும்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அளவுக்கு அதிகமாக உயரவே மத்திய அரசின் இந்த நடவடிக்கை வழி வகுக்கும்.

மத்திய அரசின் நடவடிக்கை:
எனவே, கலால் வரி உயர்வை ரத்து செய்து விட்டு பெட்ரோல், டீசலின் விலையைக் குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும்.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications