”8 வன்னிய வேட்பாளர்களையும் திரும்ப பெற வேண்டும் அதிமுக” - ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக மகளிர் அரசியல் எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,
"கடலூர் உட்பட 10 தொகுதிகளில் பாமக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா வன்னிய சமுதாயத்தினருக்கு எதிராக செயல்படுகிறார். இந்தநிலையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 8 பேர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அறிவித்துள்ளார்.
வன்னியர்களை அறவே வெறுக்கும் ஜெயலலிதா, அறிவித்துள்ளள 8 வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைத் திரும்பப் பெற வேண்டும். அதிமுக சார்பில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications