டிவிட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் என்ட்ரி ஆனார் ராமதாஸ்!
சென்னை: மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போல பா.ம.க.நிறுவனர் ராமதாசும் பேஸ் புக் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அவரை 3,300 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை பின் பற்றி பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக வலை தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இளைய தலைமுறையினரை கவர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாசும், பேஸ் புக் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே ராமதாஸ் ட்விட்டர் கணக்கைத் ( https://twitter.com/drramadoss) தொடங்கி தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், https://www.facebook.com/DrRamadoss என்ற பேஸ் புக் கணக்கை இன்று தொடங்கி கருத்துக்களை ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முகநூல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சுமார் 3,300 பேர் ராமதாசை பின்தொடர்வதாக பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ட்விட்டர் கணக்கில் ராமதாசை சுமார் 6,000 பேரை பின் தொடர்வதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications