கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம்- பாமக நிர்வாகக் குழு தீர்மானம்
திண்டிவனம்: லோக்சபா தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் தேசியக் கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று அறிவித்தது பாமக. பின்னர் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியது.

பாரதிய ஜனதா அணியில் தாம் ஏற்கெனவே அறிவித்த 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றது பாமக. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனர் ராமதாசுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications