தயவு செய்து ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக ஏற்கவும்... கரூர் டிஆர்ஓவிடம் மனு கொடுத்த பாமக!
கரூர்: முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை கரூர் மாவட்ட நிர்வாகம் ஏற்காதது ஏன் என்று கேட்டு கரூரில் மக்கள் குறை தீர்ப்புமுகாமில் கலந்து கொண்\ மாவட்ட வருவாய் அதிகாரி மனு கொடுத்த பாமகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பா.ம.க மாநில துணை பொதுசெயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் மாவட்ட வருவாய் அலுவலர் அருணாவிடம் இன்று மனு அளித்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் எங்கேயும் தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை அரசு அதிகாரிகள் வைப்பதில்லை. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தற்போதைய முதல்வர் பன்னீர் செல்வத்தின் புகைப்படம் வைப்பத்தில்லை. ஏன் தமிழக முதல்வராக பன்னீர் செல்வத்தை அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லையா.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் தான் கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய முதல்வரான பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இதுவரை கரூர் மாவட்ட அளவில் எந்த ஒரு அரசு அலுவலகங்களில் வைக்கப்படவில்லை. ஆதலால் முதல்வர் பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications