Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ்கள் நஷ்டத்தில் ஓட காரணம் ஊழல்தான்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். போக்குவரத்து கழகத்தில் ஊழல் காரணமாகவே நஷ்டத்தில் இயங்குவதாக அன்புமணி குற்றம் சாட்டினார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பஸ் கட்டண உயர்வு...மாணவர்கள் போராட்டம்..வீடியோ

    சென்னை: அரசு போக்குவரத்து கழக்கத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஊழியர்களை நியமித்த காரணத்தினாலே நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

    பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து பாமக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

    வட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகி கள் தெரிவித்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட் டம் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

    பாமக தொண்டர்கள் முழக்கம்

    பாமக தொண்டர்கள் முழக்கம்

    சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அன்புமணி ராமாதாஸ் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். தமிழக அரசுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

    லஞ்சம் வாங்கி பணி

    லஞ்சம் வாங்கி பணி

    செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும் போது அரசு பேருந்துகள் மட்டும் நஷ்டத்தில் இயங்குவது ஏன் என்று கேட்டார். அரசு போக்குவரத்து கழகத்தில் 90 ஆயிரம் பேர் மட்டுமே தேவைப்படும் பணிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியுள்ளனர். லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்துள்ளனர். அதிமுக மட்டுமல்ல திமுக காலத்திலும் ஊழல் நடந்துள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

    அரசுக்கு எதிராக முழக்கம்

    அரசுக்கு எதிராக முழக்கம்

    கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்திலும், ஜி.கே.மணி தலைமையில் திண்டிவனத்தி லும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல் அந்தந்த மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+