16 நாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் அம்மா.. முற்றுகையில் குதித்த பாமக.. கரூரில் பரபரப்பு!
கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி 16 நாட்களாக ஒட்டப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேனர்களை அகற்றக் கோரி பா.ம.க வினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரவுண்டானா, அரிஸ்டோ கார்னர், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், பை-பாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் அனைத்து இடங்களிலும் விளம்பர பேனர்களை வைத்து போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க வினர் கடந்த 16 நாட்களாக அம்மா பேனர்களை வைத்துள்ளனர்.

ஆனால் சேலத்தில் நடைபெற்ற பாமக மாநாட்டிற்காக வைக்கப்பட்ட பேனரை 6 மணி நேரத்தில் கரூர் நகராட்சி அலுவலர்கள் எடுத்தனர். முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்ட இந்த பேனர்களை காவல் துறையினரும், கரூர் நகராட்சி அதிகாரிகளும் எடுத்ததால் பாமகவினர் ஆவேசமடைந்தனர்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முடித்தவுடன் நேராக கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டார். இவருடன் சுமார் 50 க்கும் மேற்பட்ட பா.ம.க வினரும் சென்று முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பி.எம்.கே.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுகின்ற அதிமுகவன் கைப்பாவையாக அதிகாரிகள் மாறும் அவல நிலை உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் "அம்மா" விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் பல்வேறு போராட்டங்களை கரூர் நகராட்சியை கண்டித்து பா.ம.க நடத்தும். இதற்காக நீதிமன்றத்தையும் நாடவுள்ளோம். விரைவில் இப்பேனர்களை பா.ம.க-வே மக்களை திரட்டி அகற்றும் என்று தெரிவித்தார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications