தமிழனின் மூச்சுக்காற்றில் எரிந்து போவீர்கள்!

ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் குறித்து எழுத்தாளர் லதா சரவணன் எழுதிய கவிதை.

Subscribe to Oneindia Tamil

ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் குறித்து எழுத்தாளர் லதா சரவணன் எழுதிய கவிதை.

- லதா சரவணன்

வாடி வாசல் காத்திருக்கிறது
கொப்பளிப்பது குருதியெனினும்
பாராம்பரியத்தின் பாதிப்பென
வீரத்தழும்பினை வெறி கொண்டு
ஏற்கும் வீரியத்தை குறைபேசிட வந்தாயோ

Poem on Jallikattu protests

நீ ஆயிரம் முறை அழித்தாலும்
மண்ணில் புதைத்தாலும்,
நெருப்பில் சுட்டாலும்
பீனிக்ஸ் பறவையாய் மீட்சித்து
வரும் தமிழினம் நாங்கள்
வந்தாரை வாழவைப்போம்
எங்கள் பண்பை இகழ்ந்தால் ......
அதற்கும் பதிலடிகொடுப்போம்.
இருள் கிழித்து வரும்
ஒளியைப்போல சீறி வரும்
காளை பார்க்காமல் சிலிர்த்து எழும்
எங்கள் இளங்காளைகளின் வேகத்தைத் தடைபோட
இங்கு எத்தனை ஆசாமிகள்
வெறும் சூடம் ஏற்றி உங்களை வழிபட்டுக்கொண்டே இருக்கத்தான் தமிழர்களா
நீரில், நிலத்தில், மின்சாரத்தில்,
இன்னும் காற்றில் மட்டும்தான்
தமிழனை ஏமாற்றவில்லை, தரம் பிரிக்கவில்லை
எங்களின் பொறுமையும், அகிம்சையும்
உங்களுக்கு சாவிகொடுத்த பொம்மைகளின் சாகசமாக தெரிகிறதா?
சர்க்கஸ் கோமாளி இல்லை தமிழன்.....
நீ எள்ளி நகையாட
எதிர்க்கத் திராணியில்லாத பூச்சிகள் இல்லை
கொத்துக்கொத்தாக உயிர்கொடுக்க...........!
இதோ வீறு கொண்டு எழுந்துவிட்டான்
இளைஞன் கதிர் அரிவாள் கொண்டு தலைசீவிட
நெற்கதிர்கள் பாதையில் இரத்தத்தை பீய்ச்சிய உழவனின் மகன்.......
பீட்டா வீசும் பிச்சைக்கு நீ அடிபணியலாம்
சாதி இன மதம் கடந்து களம் கண்டிருக்கும்
எம் தமிழனின் மூச்சுக்காற்றில் எரிந்துபோவீர்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+