பாவேந்தர் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதி இனி ”கவிஞர்கள் தினம்” - தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதி கவிஞர்கள் தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் காலை 10.30 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரையில் கவிஞர்கள் தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அவரது உரையில், "தமிழ்மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு இந்த அரசு எப்போதுமே உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறது. முதன்முறையாக, இசை மற்றும் கவின் கலைகளுக்கென தனி பல்கலைக்கழகம் ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. தகுதி வாய்ந்த அறிஞர்களின் இலக்கிய சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, ஜி.யூ. போப் விருது, அம்மா இலக்கிய விருது போன்ற பல விருதுகள் இந்த அரசால் நிறுவப்பட்டுள்ளன.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாளை ஆண்டு தோறும் தமிழ்க்கவிஞர் தினமாகக் கொண்டாட இந்த அரசு முடிவெடுத்துள்ளது. நமது சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த அரசு பல நினைவிடங்களை அமைத்ததோடு, பல சிலைகளையும் நிறுவியுள்ளது.
அறிவியல், மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலனில் உயர் பங்களிப்பாற்றிய தமிழகத்தைச்சேர்ந்த சாதனையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை வழங்க இந்த அரசு முன் வந்துள்ளது பாராட்டத்தக்கது. அவரது பிறந்த நாளான அக்டோபர் திங்கள் 15 ஆம் நாள் இளைஞர் எழுச்சி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது சாலப்பொருத்தமானது. ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடத்தை அமைப்பதற்காக 1.36 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications