கடைக்கு வெளியே கேமரா கட்டாயம்: சென்னை நகை கடை அதிபர்களுக்கு போலீஸார் அதிரடி உத்தரவு
நகைக்கடைகளுக்கு வெளியே காமிராவை பொருத்த வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை: நகைகடைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் காமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று போலீஸார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக நகை கடைகள், வங்கிகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றதை தொடர்ந்து போலீசார் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

நொளம்பூர் காவல் நிலையத்தில் நகை கடை, மற்றும் அடகு கடை அதிபர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த அடகு கடை உரிமையாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கடைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கடைக்கு தரமான பூட்டுக்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், வேலை செய்பவர்கள் பற்றி முழு விவரங்களை உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், பழைய நகைகளை யாராவது விற்பனை செய்ய வந்தலோ சந்தேகத்திற்குரியவர்கள் யாராவது கடைக்கு வந்தாலோ தங்களை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் இந்தப் பணிகளை முடுக்கி விட்டுள்ளதுடன், சென்னையில் அனைத்து காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நொளம்பூர் பகுதியில் பொது இடங்களில் 200 இன்டர்நெட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை கண்காணிப்பு அறையில் இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications