கடைக்கு வெளியே கேமரா கட்டாயம்: சென்னை நகை கடை அதிபர்களுக்கு போலீஸார் அதிரடி உத்தரவு
நகைக்கடைகளுக்கு வெளியே காமிராவை பொருத்த வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை: நகைகடைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் காமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று போலீஸார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக நகை கடைகள், வங்கிகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றதை தொடர்ந்து போலீசார் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

நொளம்பூர் காவல் நிலையத்தில் நகை கடை, மற்றும் அடகு கடை அதிபர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த அடகு கடை உரிமையாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கடைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கடைக்கு தரமான பூட்டுக்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், வேலை செய்பவர்கள் பற்றி முழு விவரங்களை உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், பழைய நகைகளை யாராவது விற்பனை செய்ய வந்தலோ சந்தேகத்திற்குரியவர்கள் யாராவது கடைக்கு வந்தாலோ தங்களை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் இந்தப் பணிகளை முடுக்கி விட்டுள்ளதுடன், சென்னையில் அனைத்து காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நொளம்பூர் பகுதியில் பொது இடங்களில் 200 இன்டர்நெட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை கண்காணிப்பு அறையில் இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications