For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குளிர்பானத்தில் மது கலந்து இளம்பெண்ணை பலாத்காரம்... 3 பேரை கைது செய்தது சேலம் போலீஸ்

தருமபுரி அருகே இளம்பெண்னை கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    காதலியை ஹோட்டலில் அடைத்து வைத்து நண்பர்களுடன் பலாத்காரம் செய்த இளைஞர்- வீடியோ

    தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக போலீஸார் 3 பேரை கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் கணவனால் கைவிடபட்டவர். தனது தாத்தாவின் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வாய்பேசமுடியாத தனது தாயுடன் வந்துள்ளார்.

    அப்போது பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளியின் உறவினரான நைவின்மாலிக் என்பவர் இந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம் காரணமாக, அடிக்கடி இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.

    ஆசை வார்த்தை

    ஆசை வார்த்தை

    இந்தநிலையில் நைவின்மாலிக் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி கடந்த 29-ஆம் தேதி சேலத்துக்கு வரவழைத்துள்ளார். அன்றைய தினம் முழுவதும் அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி வன உயிரியல்பூங்கா மற்றும் ஏற்காட்டிற்கு சென்றுள்ளனர்.

    தங்கும் விடுதியில்

    தங்கும் விடுதியில்

    அப்போது நைவின்மாலிக் தனது சகோதரர் நவீஸ் மற்றும் நண்பர் ரஞ்சித் ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றைய தினம் இரவு சேலம் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

    பலாத்காரம்

    பலாத்காரம்

    அப்போது நைவின்மாலிக் குளிர்பானத்தில் மதுவை கலந்து அந்த பெண்ணுக்கு கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அதன்பிறகு மதுபோதையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நைவின்மாலிக் பின்னர் தனது சகோதரர் நவீஸ் மற்றும் ரஞ்சித் ஆகியோரையும் அழைத்துள்ளார்.

    30 ஆயிரம் ரொக்கமும் பறிப்பு

    30 ஆயிரம் ரொக்கமும் பறிப்பு

    அவர்களும் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் அழுத பெண்ணை அடித்து கத்தி முனையில் மிரட்டி தொடர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பெண்ணின் ஏடிஎம் அட்டையை கொண்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்து கொண்டு நடந்தவற்றை போலீஸிடம் கூறக் கூடாது என மிரட்டினர்.

    3 பேர் கைது

    3 பேர் கைது

    மேலும் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட அப்பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்ததை தெரிவித்துவிட்டு, நேற்று சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நைவின்மாலிக், நவீஸ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Police arrest 3 hooligans who molest a teenage girl by mixing alcohol in cool drinks near Salem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X