சென்னையில் ஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு கைது
சென்னையில் ஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: ஸ்டாலினை சந்திக்க சென்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவராக உள்ளவர் அய்யாக்கண்ணு. திருச்சியை சேர்ந்த இவர் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரி சக விவசாயிகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நூதன போராட்டங்களை நடத்தியவர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
இதற்கு பாராட்டு தெரிவித்து சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார் அய்யாக்கண்ணு. அப்போது தமிழக விவசாயிகளை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் திமுக செயல்தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேச சட்டசபைக்கு அய்யாகண்ணு வந்திருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் கைது செய்தது.












Click it and Unblock the Notifications