போலீஸ் தடையை மீறி வாடிவாசலுக்குள் நுழைய முயற்சி- குண்டுகட்டாக இளைஞர்கள்- மாணவர்கள் கைது
அலங்காநல்லூரில் வாடிவாசலில் நுழைய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் தடையை மீறியதால் குண்டுகட்டாக அவர்கள் இழுத்து செல்லப்பட்டனர்.
மதுரை: அலங்காநல்லூரில் வாடிவாசலுக்குள் நுழைய முயற்சித்த இளைஞர்கள், மாணவர்கள் குண்டுகட்டாகவும் தரதரவெனவும் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.
உச்சநீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் எப்படியும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவோம் என இளைஞர்கள் அறிவித்திருந்தனர்.
இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அலங்காநல்லூரில் குவிந்தனர். தடையை மீறி ஒருசில காளைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

போலீஸ் தடியடி
பின்னர் பிரமாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது இளைஞர்கள் வாடிவாசலை நோக்கி முன்னேற முயற்சித்தனர். ஆனால் போலீசார் தடியடி நடத்தினர்.

ஆவேச குழு...
இதைத் தொடர்ந்தும் திடீரென ஒரு பேரணி நடத்தப்பட்டு அமைதியாக கலைந்து சென்றது. பின்னர் மதுரையில் இருந்து மாணவர்கள் குழு ஒன்று ஆவேசமாக அலங்காநல்லூருக்குள் களமிறங்கியது.

தர்ணா போராட்டம்
போலீசாரின் தடையை மீறி வாடிவாசல் செல்வோம் என பேரணியாக முழக்கமிட்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

குண்டு கட்டாக தரதரவென இழுத்து...
தர்ணா போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து அவர்கள் குண்டு கட்டாகவும் தரதரவெனவும் இழுத்து செல்லப்பட்டு போலீஸ் வேனில் தள்ளிவிடப்பட்டனர்.
இதனால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications