Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈசிஆர் விவகாரம்.. தனியார் கல்லூரி மாணவர் கைது.. 2 கார்களை பறிமுதல் செய்த போலீஸ்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரினை விரட்டிச் சென்று, மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரி மாணவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வீடியோவில் இருந்த இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து அத்துமீறும் வகையில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருப்பதாக விமர்சித்தனர்.

Police Arrested an Private College Student in the ECR women video issue and 2 cars seized

இதன்பின் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், முட்டுக்காடு அருகே வந்த போது இளைஞர்கள் 7,8 பேர் இரு கார்களில் வந்து எங்களை வழிமறித்து பிரச்சனை செய்தனர். அப்போது காரை நிறுத்தாமல் நாங்கள் சென்ற போது, வீட்டின் அருகே வந்து காரினை நிறுத்தினர்.

அப்போது நாங்கள் அவர்களின் காரினை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக பிரச்சனை செய்தனர். ஆனால் நாங்கள் அவர்களின் காரினை இடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பேசப்பட்டதால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்க்கப்பட்டது.

அதேபோல் ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஏற்கனவே வெளியான வீடியோவில் இளைஞர்களின் முகம் தெளிவாக தெரிந்திருந்ததால், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இன்று கார்களின் அடையாளத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்த ஒரு காரினையும், பொத்தேரியில் இருந்த மற்றொரு காரினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல் இளைஞர் ஒருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார். இந்த நிலையில் விசாரணையின் முடிவில், தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்பின் மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+