ஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள்.. நக்கீரன் கோபால் பரபரப்பு பேட்டி!
ஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள் என நக்கீரன் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள் என நக்கீரன் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார்.
நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் நக்கீரன் இதழில் ஆளுநர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டு அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நக்கீரன். அப்போது ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கூறிய நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்க கோரிய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.
[ குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.. நக்கீரன் கோபால் உருக்கம் ]

சிறையில் அடைக்க முடியாது
அடிப்படை ஆதாரமற்ற வகையில் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். எனவே கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

அனைவருக்கும் நன்றி
இதைத்தொடர்ந்து விடுவிக்கப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதித்துறை நின்றுள்ளது.

எதற்கு கைது என தெரியாது
காவல்துறை என்னை கைது செய்த போது காரணம் ஏதும் கூறவில்லை. செல்போனை பறித்து கொண்டனர். விமான நிலையத்தில் எதற்காக கைது செய்தார்கள் என்றே எனக்கு தெரியாது

கொலை குற்றவாளியை போல்
எழும்பூர் நீதிமன்றம் வந்த பிறகுதான் என்ன வழக்கிற்காக கைது செய்தார்கள் என்றே எனக்கு தெரிந்தது. ஒரு கொலைக் குற்றவாளியை கைது செய்வது போல் என்னை கைது செய்தார்கள்.

நக்கீரன் பணி தொடரும்
புலனாய்வு செய்து வெளியிடும் 'நக்கீரன்' பணி தொடரும். செய்தியில் ஆட்சேபம் இருந்திருந்தால் மறுப்பு தெரிவித்து இருக்கலாம். இவ்வாறு நக்கீரன் கோபால் விடுதலைக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications