பள்ளி ஆண்டு விழாவில் அதிக ஒளியில் விளக்கு.. 100 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு.. தாளாளர் கைது
நெல்லையில் பள்ளி மாணவர்கள் கண் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நெல்லை: நெல்லையில் இந்து தொடக்கப்பள்ளி மாணவர்களின் கண் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு மேடையில் அதிக ஒளி கொண்ட விளக்குகள் வைக்கப்பட்டது.
இதனால் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பலருக்கு அதே இடத்தில் கண்களால் சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் 100க்கும் அதிகமான மாணவர்களும், பெற்றோரர்களும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அந்த பள்ளி நிர்வாகிகள் மீது ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அந்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.