இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்.. வரலாறு காணாத பாதுகாப்பு.. 5 தாலுகா பள்ளிகளுக்கு லீவு
Recommended Video

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் இன்று அவரது 61வது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, அவருக்கு, அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருகை தர உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் பிரிவு, வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, பரமக்குடி முழுவதும் 75 கண்காணிப்பு காமிராக்கள், பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கண்காணிப்பு பணியில் ட்ரோன் காமிராக்கள் பறக்கவிடப்பட்டன. தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்டம் முழுக்க பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 3 ஐஜிக்கள், 5 டிஐஜிக்கள், 17 எஸ்.பிக்கள், 18 கூடுதல் எஸ்.பிக்கள், 45 டிஎஸ்பிக்கள் இந்த மண்டலங்களுக்கு பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருபுவனம் ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று மாலை 4 மணி முதல் இன்று, நள்ளிரவு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications