கலவரத்தைத் தூண்டினார் கருணாநிதி.. 3 பிரிவுகளில் "கேஸ்" போட்ட போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

Police book Karunanidhi, Stalin and 500 DMK men for instigating attack!
சென்னை: கலவரத்தைத் தூண்டியதாக கூறி திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 500 பேர் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று அதிமுகவினர் பல்வேறு போராட்டங்கள், கட்டாயக் கடையடைப்பு, பஸ் மறியல், கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் திமுக தலைவர் மற்றும் பொருளாளர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம், மற்றவர்களுக்குத் தலா 10 கோடி அபராதம் என பெங்களூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் குதித்தனர். கல்வீச்சு, கட்டாயக் கடையடைப்பு உள்ளிட்ட வன்முறையால் பொதுமக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதி, சொத்துக் குவிப்பு வழக்கின் முக்கிய காரணகர்த்தாவான சுப்பிரமணியம் சாமி ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. திமுகவினரின் வீடுகள், கட்சி அலுவலகங்களும் கூட தாக்குதலுக்குள்ளாகின.

இந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டைத் தாக்கச் சென்ற அதிமுகவினருக்கும், அங்கு குழுமியிருந்த திமுகவினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. அதில் அதிமுகவைச் சேர்ந்த செனாய் நகர் விமல், அமிஞ்சிக்கரை மோகன், அடையார் அசோக், அண்ணாநகர் ஹரிகுமார், சிந்தாதிரிப் பேட்டை வேல்முருகன் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த 6 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் ராயப்பேட்டை போலீஸில் ஒரு புகார் கொடுத்தனர். அதில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கோபாலபுரம் 2-வது தெருவில் எங்களை மறித்து பயங்கரமாக கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து போலீஸார், கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் பெயர் தெரியாத திமுகவினர் உள்பட மொத்தம் 500 பேர் மீது கலவரத்தைத் தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளனர்.

கருணாநிதி கலவரத்தைத் தூண்டினார் என்றால் தமிழகம் முழுவதும் நேற்று அதிமுகவினரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் யாரிடம் போய் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+