ஆளுநர் கிரண்பேடியை மிரட்டும் தொனியில் பேச்சு.. முதல்வர் நாராயணசாமி மீது பாஜகவினர் புகார்
புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மிரட்டும் தொனியில் பேசியதாக முதல்வர் நாராயணசாமி மீது பா.ஜ.க நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் தனக்கே முழுமையான அதிகாரம் இருப்பதாக கூறி ஆளுநர் கிரண்பேடி அரசின் அன்றாட பணிகளில் தலையிட்டு வருகிறார்.

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களில் கிரண் பேடியே உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அதே சமயம் சம்மந்தப் பட்ட துறையின் செயலாளருக்கு இது தெரிவிக்கப்படுவதில்லை. துறையின் செயலாளரும், அமைச்சரும் செய்ய வேண்டிய காரியங்களை துணை நிலை ஆளுநர் செய்து கொண்டிருப்பதால் ஏகப்பட்ட குழப்பங்கள் தற்போது புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன. அதோடு அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்களை சமூக வலை தளங்களிலும் விமர்சனம் செய்து வருகிறார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் நாராயணசாமி, மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை ஆளுநர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களிலும், புதுவை அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விமர்சிக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறினார்.
இந்தநிலையில் முதல்வர் நாராயணசாமி மீது பாஜக நிர்வாகிகள் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புதுவை மாநில பாஜக தலைவர் செல்வம், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அளித்துள்ள புகாரில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மிரட்டும் தொனியில் நாராயணசாமி பேசி வருவதாக மனுவில் கூறியுள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications