சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை!
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் நெருக்கடியால் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அன்புச்செழியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.
அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்புச்செழியனுக்கு நெருக்கமானவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications