டாஸ்மாக் பாரில் தகராறு... ஆட்டோ ஓட்டுநரை பாட்டிலை உடைத்து குத்திக் கொன்ற காவலர்
நெல்லை : ஆலங்குளம் அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை காவலர் ஒருவரே பாட்டிலால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருதகுளம் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் சுரண்டை காவல் நிலையத்தில் காவலராகவும், ஜீப் ஓட்டுனராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஆலங்குளம் ஊத்துமலை செல்லும் வழியில் நாச்சியார்புரம் விலக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு அனுமதிக்கப்பட்ட பார் கிடையாது என்பதால், அப்பகுதியில் உள்ள ஒருவர் சின்ன தகர ஷெட் போட்டு குளிர்பானங்கள் உள்ளிட்டவைகள் வைத்து மினி பார் நடத்தி வருகிறார்.
அங்கு காவலர் சண்முகசுந்தரம் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நெட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்து என்பவரும் இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகராறு முற்றிய நிலையில் காவலர் சண்முகசுந்தரம் மதுபாட்டிலை உடைத்து ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்துவை குத்தியுள்ளார். இதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இசக்கிமுத்து உயிரிழந்தார்.
இதையடுத்து, காவலர் சண்முகசுந்தரம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநரை சட்டத்தை காக்க வேண்டிய காவலர் ஒருவரே மது பாட்டிலால் குத்திக் கொன்ற சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications