காவிரிக்காக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரியும் அதனை அரசிதழில் வெளியிடக் கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டம் பெரும் வெற்றி பெற்றது.
குறிப்பாக சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர். மெரினாவில் நடைபெற்ற போராட்டம் ஒட்டுமொத்த இந்தியா உட்பட உலகையை திரும்பி பார்க்க வைத்தது.

மெரினாவில் போராட்டம்
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழக இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது

போலீசார் குவிப்பு
மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை-மெரினாவில் கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாகனங்களுக்கு கெடுபிடி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்ற நிகழ்வை தவிர்க்க காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வாகனங்களில் செல்வோரிடமும் போலீசார் விசாரித்து அனுப்பினர்.

பள்ளி மாணவர்கள்
கூட்டமாக மெரினா கடற்கரைக்கு வருவோரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் கெடுபிடியால் வெப்பத்தை தணித்துக்கொள்ள கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

போராட்டம் - போட்டோ
சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதை தொடர்ந்து மறுதேர்வு நடத்த மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் கெடுபிடியால் வெப்பத்தை தணித்துக்கொள்ள கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

தேடுதல் வேட்டை
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பிடிக்க உதவி ஆணையர் உட்பட ஏராளமான போலீசார் மெரினா கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தீவிரமாக தேடினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பெண்கள் என 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications