மோடி பங்கேற்ற மானிய ஸ்கூட்டர் விழாவுக்கு லேட்டா வந்த தமிழிசை.. அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு!
பிரதமர் மோடி பங்கேற்ற மானிய ஸ்கூட்டர் விழாவுக்கு தாமதமாக வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற மானிய ஸ்கூட்டர் விழாவுக்கு தாமதமாக வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு
முன்னாதாக விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பிக்கள் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தாமதமாக வந்த தமிழிசை
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிரதமர், ஆளுநர், முதல்வர் உள்ளிடோர் வந்த பிறகு தாமதமாக வந்தார் தமிழிசை.

வாக்குவாதம் செய்த தமிழிசை
இதனால் பாதுகாப்பு கருதி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழிசை போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவருக்கு விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

விமான நிலையத்லும் இல்லை
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக விமான நிலையத்திற்கு வந்த மோடியை வரவேற்கும் இடத்திலும் தமிழிசை சவுந்தரராஜன் காண முடியவில்லை. பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவரான தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications